நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கன்னட திரை உலகில் கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் இயக்குனர் ராஜ் பி.ஷெட்டி. பெரும்பாலும் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள டர்போ திரைப்படத்தில் மெயின் வில்லன் ஆக நடித்துள்ளார் ராஜ் பி.ஷெட்டி. புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதைப்படி ராஜ் பி.ஷெட்டி தமிழகத்தை சேர்ந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வசனம் பேச வேண்டிய சூழல் இருந்தது. தமிழில் பேசுவதற்கு ரொம்பவே தடுமாறி உள்ளார் ராஜ் பி.ஷெட்டி. அதே சமயம் மலையாளத்தில் அவர் சரளமாக பேசியதை பார்த்த இயக்குனர் வைசாக் உடனடியாக அவரது கதாபாத்திரத்தை மலையாளியாக மாற்றி மலையாளத்தில் வசனங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவற்றை ஒரே டேக்கில் பேசி ஆச்சரியப்படுத்தினாராம் ராஜ் பி.ஷெட்டி.