சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தெலுங்கு சினிமாவில் 2002ம் ஆண்டு ஈஸ்வர் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ். அதன் பிறகு வருஷம், சத்ரபதி, டார்லிங், பில்லா என பல படங்களில் நடித்து வந்தவருக்கு ராஜமவுலியின் பாகுபலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி- 2 படத்திற்கு பிறகு சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ், சலார் போன்ற படங்களில் நடித்த பிரபாஸ், தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள ஒரு பதிவு அவரது ரசிகர் வட்டாரத்தில் பரபரப்பு கூட்டி உள்ளது. அதாவது ஒரு ஸ்பெஷல் நபர் நமது வாழ்க்கையில் நுழையப் போகிறார் காத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இப்படி அவர் ஸ்பெஷல் நபர் என்று குறிப்பிட்டது ஒருவேளை பிரபாஸுக்கு பெண் கிடைத்து விட்டதா? என்று ஒரு தரப்பினரும், ஒருவேளை அடுத்த படத்தை ஸ்பெஷல் நபர்கள் யாரேனும் இயக்கப் போகிறார்களோ? அது குறித்த தகவலை தான் இப்படி கூறியிருக்கிறாரோ என்றும் பிரபாஸ் ரசிகர்கள் பலவிதமான யூகங்களை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.