நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழில் வெற்றிவேல், கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் குருவாயூர் அம்பலநடையில் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதில் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ள நிகிலா விமல் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
அப்போது ஒரு பேட்டியில் அவரிடம், சமீப காலமாக மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம், பிரம்மயுகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இல்லையே.. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிகிலா விமல், “எல்லா படங்களிலும் கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. படத்தின் கதை எந்த கதாபாத்திரங்களை கேட்கிறதோ அவை மட்டுமே இருந்தால் போதும்.. ஆவேசம், மஞ்சும்மேல் பாய்ஸ் படங்களில் அதைத்தான் செய்திருந்தார்கள். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேவையில்லாமல் வலிய திணித்தாள் அது படத்தின் வெற்றியை பாதித்துவிடும். குறிப்பாக கமர்சியல் காரணங்களுக்காக படத்திற்கு கதாநாயகி வேண்டும் என திணிக்கவே கூடாது” என்று தனது கருத்தை ஆணித்தரமாக கூறியுள்ளார் நிகிலா விமல்.