சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
தமிழில் அழகிய தீயே படத்திண் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். அதன் பிறகு சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த அவர், அங்கு தனது மனம் கவர்ந்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டதாவது: நெய் வறுவல் வாசனையிலிருந்து பில்டர் காபியின் ஆறுதல் சிப் வரை சென்னையின் ஒவ்வொரு மூலையும் ஒரு கதை சொல்கிறது. மல்லிகை வாசனை வீசுகிறது, காஞ்சிபுரம் புடவைகள் கண்களை கவருகிறது; பாரம்பரியத்தின் மீதான காதல் ஆழமாக ஓடும் நகரம் இது.
கோயில்கள், வரலாற்றின் காவலர்களாக நிற்கின்றன; கடந்த கால கதைகளை கிசுகிசுக்கும் பொக்கிஷங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பரதநாட்டியத்தின் அழகான அசைவுகள், பிரியா அக்கா போன்ற அன்பான குருக்களின் ஞானத்தாலும் அக்கறையாலும் வழிநடத்தப்படும் ஆன்மாவின் சாரத்தைப் பேசுகின்றன. துடிப்பான நிறங்கள் மற்றும் செழுமையான கலாசாரம் கொண்ட சென்னை, இதயங்களைக் கவரும் மற்றும் அவற்றை இறுக்கமாகப் பிடிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.