மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய புகழ்பெற்றவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ். அவரது மகன் விஜய் யேசுதாஸ் தந்தையை போலவே பின்னணி பாடகராக மாறி தற்போது பிஸியான பாடகராக வலம் வருகிறார். அது மட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு மீதான ஆர்வத்தால் சில படங்களில் கதாநாயகனாக, வில்லனாக நடித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.
கடந்த 2007ல் தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய் யேசுதாஸ். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016ல் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்தும் அதற்கு பிறகான வாழ்க்கை குறித்தும் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார் விஜய் யேசுதாஸ்.
அவர் கூறும்போது, “எங்களது பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் பாதிக்கப்பட்டவன் என்பதை விட அதிகம் பொறுப்புள்ளவனாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது குழந்தைகளிடம் எப்போதும் சந்தோஷத்தை தக்க வைக்கும் விதமாகவே என்னுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொண்டேன். குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா, தனது தாயுடன் இருக்கிறார்களா என்கிற விவரம் எதுவும் வெளியில் நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கே சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள். விவாகரத்து பற்றிய அந்த சோகத்திலேயே இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை.. வேலைகளில் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.