மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர். 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கரீனா பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறார். தற்போது அவர் ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) இந்திய தூதரா நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்காக ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியம் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து கரீனா கபூர் கூறும்போது, “இந்த பொறுப்பை மிகுந்த கவுரவம் மற்றும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பொறுமையுடன், மனநிறைவாக வேலை செய்திருக்கிறேன். இதையடுத்து ஐ.நா சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதனால் எனது பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பொறுப்பை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, இந்தியாவின் எந்த பகுதியில் எந்த குழந்தை பாதிக்கப்பட்டாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பேசக்கூடிய குழந்தையாக இருந்தாலும், அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அனைத்து குழந்தைக்கும் அவர்களது அடிப்படை உரிமை கிடைப்பதற்காக பாடுபடுவேன்” என்கிறார் கரீனா கபூர்.