ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்க, மோகன் பாபுவே இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடும் விதமாக பல முன்னணி நட்சத்திரங்களையும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் பிரபாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார் ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் இருந்து அக்சய் குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த அக்சய் குமார் தற்போது தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
“அக்சய் குமாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள உதவியது. நிறைய சிரிக்க வைத்தது. அதே சமயம் அவரது ஆக்சனை இப்போது மிஸ் பண்ணுகிறேன். வருங்காலத்தில் இன்னும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் விஷ்ணு மஞ்சு.