ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது தமிழில் ‛கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர்- 2, ஜனநாயகன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கும் அனிருத், தெலுங்கில் ‛கிங்டம்' படத்தை அடுத்து ‛தி பாரடைஸ், டாக்ஸிக், கிங்' என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், அனிருத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், தனக்கு தேவைப்படும்போது ‛சாட் ஜிபிடி'-ஐ பயன்படுத்தி தான் இசையை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‛‛சமீபத்தில் ஒரு பாடலுக்கு என கம்போசிங்கில் நான் ஈடுபட்டிருந்த போது இரண்டு வரிகளில் சிக்கிக்கொண்டேன். அப்போது அதை சாட் ஜிபிடி-க்கு எடுத்துச் சென்று சந்தா வாங்கி ஏஐ இடம் எனக்கு உதவுமாறு கேட்டேன். அப்போது சாட் ஜிபிடி எனக்கு சுமார் 10 ஆப்ஷன்களை வழங்கியது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து எனது இசைப் பணியை தொடர்ந்தேன்'' என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அனிருத்.
அதோடு சில சமயங்களில் சரியான இசை தொகுப்புகள் கிடைக்காமல் தவிக்கும் போது இதுபோன்று ஏஐ-யின் உதவியை நாடுவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை என்கிறார் அனிருத்.