கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
1500 படங்களுக்கு மேல் இசையமைத்து இசையில் சாதனை படைத்தவர் இளையராஜா. தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைக்கிறார். காப்புரிமை தொடர்பாக கடந்த சில தினங்களாக அவரைப்பற்றி பிரச்னைகள் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கு சிலர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இளையராஜாவோ மொரீஷியஸ் தீவில் அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார். அங்குள்ள கடற்கரை ஒன்றில் தனியாக அலையை ரசித்துபடி இருக்கும் அவரின் போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் இளையராஜா. இந்த போட்டோ வைரல் ஆனது. இப்போது அவருடன் அவரது மகனும், இசையமைப்பாளருமான யுவன் இருக்கும் மற்றொரு போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஓட்டல் ஒன்றில் யுவனுக்கு உணவை ஊட்டி விட்டு மகிழ்கிறார் இளையராஜா. இந்த புகைப்படங்கள் வைரலாகின.