இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒருவர் மற்றொருவரை 'அன்பாலோ' செய்த பின்புதான் இது தெரிய வந்துள்ளது.
சாந்தனு ஹசரிகாவைப் பிரிவதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞரான மைக்கேல் கோர்சேல் என்பவரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிரிவதற்கு முன்பாக இருவரும் சில வருடங்கள் காதலித்து வந்தார்கள். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்விற்குக் கூட மைக்கேலை அழைத்து வந்து அப்பா கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஸ்ருதிஹாசன்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சாந்தனு ஹசரிகாவுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டாராம் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரது பிரிவுக்கு என்ன காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் விசாரித்த போது திருமணம் பற்றிய விவகாரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்ருதிஹாசன் விரைவில் திருமணம் செய்து கொள்ள சாந்தனுவிடம் தெரிவித்தாராம். ஆனால், அதைத் தள்ளிப் போடும் முடிவில் அவர் இருந்ததால் இருவரும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.