அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பின்னர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம், வழக்கு போன்றவற்றால் கட்டட பணிகள் பாதியில் நின்றன. சமீபத்தில் இந்த பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இதற்கு நிதி திரட்டும் பணிகளும் நடக்கின்றன.
நடிகர்கள் கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கினர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார். இப்போது நடிகரும், சங்கத்தின் முன்னாள் துணை தலைவருமான நெப்போலியன் தன் பங்கிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணிகளுக்காக பொது மக்களிடமிருந்து நிதி பெறவில்லை. அதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் நம்ப வேண்டாம் என நடிகர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.