தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய சேவை அமைப்பை தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில் அவருடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்து நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா படத்தில் நடித்தபோது நானும், லாரன்ஸூம் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் எனக்கு நண்பராக கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, மே 1ம் தேதி முதல் மாற்றம் என்ற அமைப்பை லாரன்ஸ் தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அவரது அமைப்பில் கைகோர்க்க உள்ளேன். அவர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் நிகழ்வில் அவருடன் இணைந்து, அவர் கைகாட்டும் நபர்களுக்கு உதவி செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.




