இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழகத்தில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரவர் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் ஓட்டளிக்கச் செல்லவில்லை. சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படாமல் நடந்ததும் தெரிய வந்துள்ளது.
மணிரத்னம், சிலம்பரசன் 'தக்லைப்' படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல 'தி கோட்' படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
விஜய்க்கு மட்டும் நேற்று ஓட்டளிக்க வசதியாக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார்களாம். அதேசமயம் படக்குழுவைச் சேர்ந்த வேறு யாருக்கும் ஓட்டளிக்க வசதியாக ஏன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜய், அவர் ஓட்டளித்தால் மட்டும் என்று நினைக்காமல் மற்றவர்களும் ஜனநாயக கடமை ஆற்ற வசதியாக தயாரிப்பாளரை வலியுறுத்தி இருக்க வேண்டுமல்லவா என்கிறார்கள்.