மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இசையமைப்பாளர் தேவா அவ்வப்போது இசையமைப்பதோடு, சில படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், அதையடுத்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது மணிரத்னம் எப்படி காலத்துக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாரோ அதேபோன்று நானும் என்னை மாற்றிக் கொண்டு வருகிறேன். அப்போதுதான் இந்த சினிமாவில் நீடித்திருக்க முடியும் என்று கூறிய இசையமைப்பாளர் தேவா, நடிகர் தனுஷ், தான் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களைப் போன்று சென்னை பாஷை பேசுவதற்கு இப்போதைக்கு யாருமே இல்லை என்றும் கூறினார்.
ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று சொல்லி மறுத்து விட்டேன். காரணம், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கூறிய தேவாவிடத்தில், மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இறைவனின் அருள் இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று தெரிவித்தார்.