24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! |
இசையமைப்பாளர் தேவா அவ்வப்போது இசையமைப்பதோடு, சில படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், அதையடுத்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது மணிரத்னம் எப்படி காலத்துக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாரோ அதேபோன்று நானும் என்னை மாற்றிக் கொண்டு வருகிறேன். அப்போதுதான் இந்த சினிமாவில் நீடித்திருக்க முடியும் என்று கூறிய இசையமைப்பாளர் தேவா, நடிகர் தனுஷ், தான் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களைப் போன்று சென்னை பாஷை பேசுவதற்கு இப்போதைக்கு யாருமே இல்லை என்றும் கூறினார்.
ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று சொல்லி மறுத்து விட்டேன். காரணம், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கூறிய தேவாவிடத்தில், மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இறைவனின் அருள் இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று தெரிவித்தார்.