காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இசையமைப்பாளர் தேவா அவ்வப்போது இசையமைப்பதோடு, சில படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், அதையடுத்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது மணிரத்னம் எப்படி காலத்துக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாரோ அதேபோன்று நானும் என்னை மாற்றிக் கொண்டு வருகிறேன். அப்போதுதான் இந்த சினிமாவில் நீடித்திருக்க முடியும் என்று கூறிய இசையமைப்பாளர் தேவா, நடிகர் தனுஷ், தான் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களைப் போன்று சென்னை பாஷை பேசுவதற்கு இப்போதைக்கு யாருமே இல்லை என்றும் கூறினார்.
ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று சொல்லி மறுத்து விட்டேன். காரணம், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கூறிய தேவாவிடத்தில், மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இறைவனின் அருள் இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று தெரிவித்தார்.