300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
இசையமைப்பாளர் தேவா அவ்வப்போது இசையமைப்பதோடு, சில படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட அவர், அதையடுத்து மீடியாக்களை சந்தித்தார். அப்போது மணிரத்னம் எப்படி காலத்துக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாரோ அதேபோன்று நானும் என்னை மாற்றிக் கொண்டு வருகிறேன். அப்போதுதான் இந்த சினிமாவில் நீடித்திருக்க முடியும் என்று கூறிய இசையமைப்பாளர் தேவா, நடிகர் தனுஷ், தான் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு எனக்கு அழைப்பு விடுத்தார். உங்களைப் போன்று சென்னை பாஷை பேசுவதற்கு இப்போதைக்கு யாருமே இல்லை என்றும் கூறினார்.
ஆனால் நடிப்பு எனக்கு வராது என்று சொல்லி மறுத்து விட்டேன். காரணம், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்று கூறிய தேவாவிடத்தில், மீண்டும் ரஜினி படத்துக்கு இசையமைப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இறைவனின் அருள் இருந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று தெரிவித்தார்.