காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பிரபல சினிமா தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மஹாலெட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து டிரெண்டாகி வரும் ரவீந்தர், பண மோசடி வழக்கு, ஐசியுவில் சிகிச்சை என பேசு பொருளானார். இந்நிலையில், அவர் 'என்னுடைய உலகத்தை மிகவும் மோசமாக மிஸ் செய்கிறேன்' என்று இன்ஸ்டாவில் பதிவிட, அதை பார்த்த பலரும் மஹாலெட்சுமியுடன் விவாகரத்தா? என கேட்டு வருகின்றனர். அதற்கு பதிலளித்த ரவீந்தர், 'எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மஹாலெட்சுமி தான். அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்யுங்கள். ஆனால், நீங்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது' என பதிலடி கொடுத்துள்ளார்.