இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சென்னை, தாய்லாந்து, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது துபாயில் நடக்கிறது. இதையடுத்து இறுதி கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களை வெங்கட் பிரபு வெளியிடாமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் அவரிடத்தில் அப்டேட் கேட்டு தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. அதில், கோட் படத்தின் படப்பிடிப்பு தினமும் இப்படித்தான் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சகோதரிகளான அர்ச்சனாவும், ஐஸ்வர்யாவும் கட்டையால் வெங்கட் பிரபுவின் தலையில் தாக்குவது போல் நிற்க, அவரோ அவர்களைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நின்று கொண்டிருக்கிறார்.