இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சென்னை, தாய்லாந்து, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது துபாயில் நடக்கிறது. இதையடுத்து இறுதி கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்களை வெங்கட் பிரபு வெளியிடாமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் அவரிடத்தில் அப்டேட் கேட்டு தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவருடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. அதில், கோட் படத்தின் படப்பிடிப்பு தினமும் இப்படித்தான் தொடங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சகோதரிகளான அர்ச்சனாவும், ஐஸ்வர்யாவும் கட்டையால் வெங்கட் பிரபுவின் தலையில் தாக்குவது போல் நிற்க, அவரோ அவர்களைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி நின்று கொண்டிருக்கிறார்.