8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‛கோட்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பிரசாந்த், ‛கோட்' படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், கோட் படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும். இந்த படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து இப்போதே சொல்ல விரும்பவில்லை. ஆனால் வித்தியாசமான வேடம். மற்றபடி ரிலீசுக்கு பிறகு அதை தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த்.




