'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கடந்த 2015ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் 'இன்று நேற்று நாளை' இதில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக முக்கியமான டைம் டிராவல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என தகவல் பரவி வந்தது. இப்போது இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த பாகத்தை ரவிக்குமார் இயக்கவில்லை அவரின் கதையை பரத் மோகன் இயக்குகிறார். சிவி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த பாகத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.