வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கடந்த வருடம் மாமன்னன் படத்தின் மூலம் தனது வில்லத்தனம் கலந்த நடிப்பால் ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமானார் நடிகர் பஹத் பாசில். இந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேசம் என்கிற திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் ஏற்கனவே அவர் வில்லனாக என்ட்ரி கொடுத்து அதிரவைத்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில்.
இதைத்தொடர்ந்து கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் பஹத் பாசில். மேலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரிடம் கதையை கூறி வந்துள்ளாராம் இயக்குனர் விபின் தாஸ்.
அந்த வகையில் மலையாளத்தில் இந்த படத்தின் மூலம் எஸ்ஜே சூர்யா அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கலாம். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிரித்விராஜ் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் இருவரையும் வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்ட விபின் தாஸ், அடுத்ததாக பஹத் பாசில் பட வேலைகளை துவங்க இருக்கிறாராம்.