இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 22ம் தேதி வெளியான படம் 'ரெபல்'. இப்படத்திற்கு சிறப்பான விமர்சனங்களோ, வரவேற்போ கிடைக்கவில்லை. அதனால் படம் எதிர்பார்த்ததை விடவும் மோசமான வசூலையே பெற முடிந்தது. இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படத்தை இன்று முதல் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக ஒரு தமிழ்ப் படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை தமிழ்த் திரையுலகத்தில் பாலோ செய்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்தப் படத்தை இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய படங்கள் வெளியானால் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் தர வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. அது குறித்து திரையுலக சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்கள். 'ரெபல்' இப்படி இரண்டு வாரங்களில் வெளியானதை வைத்து மேலும் சில படங்கள் இப்படி வெளியாக வாய்ப்புகள் உள்ளது.