மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
உலகில் புகழ் பெற்று விளங்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள பிரபல மியூசியங்களில் மெழுகுசிலை வைத்து பெருமைப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கின் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகுசிலை தற்போது துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கான அளவுகள் எல்லாம் கடந்த வருடமே எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் திறப்பு விழா துபாயில் நடைபெற்றது. இதற்காக சமீபத்தில் தனது குடும்பத்துடன் துபாய் கிளம்பி சென்றார் அல்லு அர்ஜுன்.
மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு, தனது மெழுகுச்சிலையுடன், புகைப்படம் எடுத்துக் கொண்ட அல்லு அர்ஜுன் அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். இதில் யார் அல்லு அர்ஜுன், எது மெழுகுசிலை என எளிதில் தெரிந்து கொள்ளாத முடியாதபடி அந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பற்றி அல்லு அர்ஜுன் கூறும்போது, “ஒவ்வொரு நடிகருக்கும் இது ஒரு மைல்கல் தருணம்' என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.