கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் கதை பின்னணியில் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதனாலேயே படத்தின் ஹீரோ முடிவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.




