மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் கதை பின்னணியில் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதனாலேயே படத்தின் ஹீரோ முடிவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.