ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களை அதிக அளவில் பங்கு பெற வைக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‛‛பெண்களிடம் பெரிய அளவில் சக்தி உள்ளது. ஐந்து ஆண்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக என்னை சுற்றி இருக்கும் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை. என்றாலும் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. பெண்களை இன்னும் மேலே கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று பேசி இருக்கிறார் சூர்யா.




