இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
என்னதான் ஆச்சு, தமிழ் சினிமாவுக்கு… எனக் கேட்க வைத்துவிட்டார்கள். பொங்கலுக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக சிறிய படங்கள் மட்டுமே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிடும்படியான ஹீரோக்களான தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சந்தானம் ஆகியோர் நடித்த படங்கள் கூட அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடவில்லை.
இந்த வருடம் ஆரம்பித்து 75 நாட்கள் ஆக உள்ள நிலையில் குறிப்பிடும்படியான வெற்றி அல்லது வசூல் என்பதே இல்லாமல் இருக்கிறது. இன்னும் 75 நாட்களுக்கும் அப்படியான படங்களும் வராத சூழ்நிலைதான் உள்ளது. தேர்வுகள், ஐபிஎல் போட்டிகள், தேர்தல் என அதற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
இந்த இடைவெளியில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த வாரமும் அது போன்ற படங்கள்தான் வர உள்ளது. சமுத்திரக்கனி, யோகிபாபு நடித்துள்ள 'யாவரும் வல்லவரே', ஆர்கே சுரேஷ் நடித்துள்ள 'காடுவெட்டி', மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'அமிகோ காரேஜ்', அனிஷ், முத்துப்ரியன், மனிஷாஜித் நடித்துள்ள 'ஆராய்ச்சி' ஆகிய படங்கள் மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றோடு மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படம் தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள படம். ஏற்கெனவே மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தமிழகத்தில் பெரும் வரவேற்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.