மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் மாநகரம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்றவர் நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து தமிழில் செலக்ட்டிவான படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'ஊரு பேரு பைரவகோனா' என்கிற படம் வெளியானது. படமும் ஓரளவு வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக சமீபத்தில் தெலுங்கு மீம்ஸ் கிரியேட்டர்களை சந்திக்கும் விதமாக படக்குழுவினர் மீம்ஸ் மீட் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள் பல கேள்விகளை நகைச்சுவையாக கேட்க, அதற்கு நகைச்சுவையாகவே பதில் அளித்தார் சந்தீப் கிஷன்.
ஒரு மீம் கிரியேட்டர் மட்டும் படத்தின் கதாநாயகிகள் வர்ஷா பொல்லாம்மா மற்றும் காவ்யா தப்பார் ஆகியோருடன் சந்தீப் கிஷன் அந்த படத்தில் நடித்தது குறித்து இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக ஒரு கேள்வியை கேட்டார். அது சந்தீப் கிஷனை மட்டுமல்ல அருகில் இருந்த வர்ஷா பொல்லாம்மா மற்றும் படக்குழுவினரையும் சங்கடத்தில் நெளிய வைத்தது. இதைத் தொடர்ந்து அந்த மீம் கிரியேட்டரிடம் இதுபோன்ற கேள்விகளை ஜோக்கிற்காக கூட எப்போதும் கேட்கக் கூடாது என்று கடிந்து கொண்டார் சந்தீப் கிஷன். அவரது இந்த பதிலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.