திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களாக சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் எதிர்பாராத விதமாக 50 கோடி வசூலிக்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆச்சரியப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த வருடத்தில் அப்படி முதல் படமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 'பிரேமலு' என்கிற படம் வெளியான முதல் நாளில் இருந்தே வரவேற்பு பெற்று 50 கோடி வசூலையும் தாண்டி விட்டது. பெரிய அளவில் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாத நஸ்லேன் மற்றும் நமீதா பைஜூ ஜோடியாக நடித்துள்ள இந்த படம் காதலை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் உருவாகி இருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமைக்காக தமிழ், தெலுங்கில் இருந்து சிலர் முயற்சித்து வருகிறார்கள். அதே சமயம் படக்குழுவினர் ரீமேக் உரிமையை தராமல் நேரடியாக ஒவ்வொரு மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த படம் இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவை மிகவும் கவர்ந்து விட்டதால் தெலுங்கில் இந்த படத்தை மொழிமாற்றம் வெளியிடும் உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் படக்குழுவதற்கு ஏற்படுத்தி தந்துள்ளார். இதை தொடர்ந்து வரும் மார்ச் 8ஆம் தேதி இந்த படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள பிரேமலு படக்குழுவினர் இயக்குனர் ராஜமவுலியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.