பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இரண்டாம் பாகம் மட்டும் தயாராகி வருகிறது என்று சொல்லப்பட்ட நிலையில் மூன்றாம் பாகத்தையும் சேர்த்தே படமாக்கி வருகிறார்கள் என்ற தகவல் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்ற தகவல் பரவிய நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளார்களாம். வட சென்னை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியத்தை படக்குழு சார்பாக வரைந்து வருகிறார்கள்.
பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தில் அந்த 'ஒற்றை சுவர்'தான் படத்தின் மையக் கருவாக இருக்கும். அது போன்ற குடியிருப்புகளில் அடுத்தடுத்த கட்டிடங்களில் விதவிதமான இந்தியன் தாத்தா உருவங்கள் வரையப்பட்டு வருகிறது.
இந்தியன் தாத்தா யார் என்பதைப் பற்றிய பாடலை அந்தப் பின்னணியில் படமாக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.