ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார் எஸ்.ஜே. சூர்யா. இதைத்தொடர்ந்து 'குஷி' படத்தை தமிழில் விஜய்யை வைத்தும், தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும் இயக்கி வெற்றி பெற்றார். இதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி, நடித்தார்.
கடந்த சில வருடங்களாக மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் நடிகராக கலக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஆக எஸ்.ஜே.சூர்யா களமிறங்க உள்ளார். 'கில்லர்' என்கிற த்ரில்லர் படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கவுள்ளார் . இதில் கார் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற உள்ளதால் இதற்காக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர், பொம்மை ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.