பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார் எஸ்.ஜே. சூர்யா. இதைத்தொடர்ந்து 'குஷி' படத்தை தமிழில் விஜய்யை வைத்தும், தெலுங்கில் பவன் கல்யாணை வைத்தும் இயக்கி வெற்றி பெற்றார். இதன் பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கி, நடித்தார்.
கடந்த சில வருடங்களாக மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் நடிகராக கலக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. அவரது கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஆக எஸ்.ஜே.சூர்யா களமிறங்க உள்ளார். 'கில்லர்' என்கிற த்ரில்லர் படத்தை தயாரித்து, இயக்கி நடிக்கவுள்ளார் . இதில் கார் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற உள்ளதால் இதற்காக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார்.
இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மான்ஸ்டர், பொம்மை ஆகிய படங்களில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.