அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க 'வாடிவாசல்' படம் பற்றிய அறிவிப்பை 2021ம் வருடம் ஜுலை மாதம் 16ம் தேதி அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார்.
'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக, சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது. படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதனுடன் பழகி பயிற்சி எடுத்தும் வந்தார் சூர்யா. 2022 தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட அந்தக் காளையைப் பிடித்துக் கொண்டு அவர் செல்லும் வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இப்படம் கடந்த மூன்று வருடங்களாக ஆரம்பமாகாமல் இழுபறியில் இருந்து வருகிறது. அதற்கான காரணம் என்னவென்பதும் தெரியவில்லை. படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாத வரையில் தெரியப் போவதில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 'வாடிவாசல்' பற்றி பல்வேறு விதமான தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்றும், சூர்யா விலகிவிட்டார் என்றும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், குறுகிய காலத் தயாரிப்பாக 'அயலான்' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்த பின்தான் சுதா படத்தில் நடிக்கப் போகிறார் என்ற புதுத் தகவலும் வெளியாகி உள்ளது.
கடந்த சில வருடங்களாக சூர்யாவின் பட வரிசையில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 'வாடிவாசல்' படத்திற்கு வழி கிடைக்குமா, கிடைக்காதா என்பதை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக சொன்னால்தான் உண்மை என்ன என்பது தெரியும். காத்திருக்கும் ரசிகர்களை தவிக்கவிட மாட்டார்கள் என நம்புவோம்.