'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். பாலிவுட்டில் அறிமுகமான இவரின் குட்பை படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான அனிமல் படம் அவரை உயரத்தில் தூக்கி வைத்துள்ளது. ரூ.2 கோடி சம்பளம் பெற்று வந்த ராஷ்மிகா இப்போது தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர்ப்ஸ் பட்டியலில் இவர் இடம் பிடித்துள்ளார். சர்வதேச மீடியா நிறுவனமான போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு பிரிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா இடம் பிடித்துள்ளார். மேலும் இசைத்துறையில் அதிதி சைகல் என்ற பா டகி இடம் பெற்றுள்ளார்.
ராஷ்மிகா தற்போது தனுஷின் 51வது படம், புஷ்பா 2ம் பாகம், ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அனிமல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.