'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் 'வழக்கு எண்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, 'சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'நினைவெல்லாம் நீயடா' என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிலந்தி, ரணதந்திரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கி உள்ளார். ராயல் பாபு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் மனிஷா, தனக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக 'நினைவெல்லாம் நீயடா' படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்து உள்ளார். நடிகர் சங்கத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''நான் நினைவெல்லாம் நீயடா படத்தில் நடித்து இருக்கிறேன். அந்த படத்துக்கு பேசிய சம்பளத்தில் 3 லட்சம் தராமல் பாக்கி வைத்துள்ளனர். எனவே படம் வெளியாகும் சூழலில் அதனை வசூலித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகார் மனுவை தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கம் அனுப்பி வைத்துள்ளது.