மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
படப்பிடிப்புக்கு செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியிலும், சினிமா ரீதியிலும் கேள்விகள் கேட்கப்படும். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி அளிக்கும் பதில் அவ்வப்போது பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்துவது உண்டு.
சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛நடிகர் விஜய் அரசியல் கட்சி துவக்கம்'' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வார்த்தையில் ‛வாழ்த்துகள்' என பதிலளித்து விட்டு சென்றார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ‛‛அரசியல் ரீதியில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்'' என்றார். மேலும், லால் சலாம் படம் பெரும் வெற்றி அடைந்ததாகவும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார்.