300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருவதோடு, அவ்வப்போது இமயமலைக்கு சென்று பாபாஜியை வணங்கிவிட்டு வருவார். இதன் காரணமாகவே அவரை சோசியல் மீடியாவில் சங்கி என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், லால் சலாம் படத்தின் இசை விழாவில் அப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினி, என் தந்தை சங்கி இல்லை என்று ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்தை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராக சித்தரிக்க முடியாது. அவர் மத நல்லிணக்கத்தை பேசக்கூடியவர். பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டைல் ஐகான். கருப்பாக இருப்பவர்களும் சூப்பர் ஸ்டாராக வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அதுமட்டுமின்றி ஆன்மிகத்தையும் சினிமா வாழ்க்கையும் தனித்தனியே பார்க்க கூடியவர் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.