மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இடையிடையே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். அதுதான் அவர் முதலும், கடைசியுமாக நடித்த தமிழ் படம்.
அதன் பிறகு கன்னட சினிமாவில் பிசியாக நடித்தவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கிருக்கிறார்.
10 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் உருவான 'இமெயில்' என்ற படம் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. எஸ்.ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இவர்கள் தவிர மனோபாலா, லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும் வெளியாகிறது.