கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் என இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. அதில் சந்தானம் பேசிய ராமசாமி வசனம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆர்யா, சந்தானம் இருவரும் பங்கேற்றனர். சந்தானம் கூறியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நாங்கள்(ஆர்யா, சந்தானம்) இருவரும் இணைந்து அடுத்து கதாநாயகர்களாக நடிக்கவுள்ளனர். அது ஒரு அட்வென்ச்சர் படம். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை மிஞ்சுகிற அளவிற்கு அந்த படம் உருவாகும்'' என்றார். சந்தானம் போன்று ஆர்யாவும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம் என்றார்.
டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.