வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? |
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் என இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது. அதில் சந்தானம் பேசிய ராமசாமி வசனம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். இந்த விழாவில் ஆர்யா, சந்தானம் இருவரும் பங்கேற்றனர். சந்தானம் கூறியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நாங்கள்(ஆர்யா, சந்தானம்) இருவரும் இணைந்து அடுத்து கதாநாயகர்களாக நடிக்கவுள்ளனர். அது ஒரு அட்வென்ச்சர் படம். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை மிஞ்சுகிற அளவிற்கு அந்த படம் உருவாகும்'' என்றார். சந்தானம் போன்று ஆர்யாவும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம் என்றார்.
டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.