டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
'கேஜிஎப்' படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த நீல். அவரும் பிரபாஸும் இணைந்த பான் இந்தியா படமான 'சலார்' படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியானது.
அதிக எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை, சாதனை வசூலும் கிடைக்கவில்லை. 1000 கோடி வசூலைக் கடக்கும் என சிலர் சொன்னதற்கு மாறாக 600 கோடி வசூலை மட்டுமே கடந்ததாகத் தெரிகிறது. விமர்சன ரீதியாக பலத்த விமர்சனங்களைப் படம் பெற்றது. 'கேஜிஎப்' சாயல்தான் படத்தில் அதிகமாக இருந்ததாகப் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டதால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. ஹிந்தியில் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட முடியும், அதனால், ஹிந்தியில் வெளியாகவில்லை.
ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.