அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'கேஜிஎப்' படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த நீல். அவரும் பிரபாஸும் இணைந்த பான் இந்தியா படமான 'சலார்' படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியானது.
அதிக எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை, சாதனை வசூலும் கிடைக்கவில்லை. 1000 கோடி வசூலைக் கடக்கும் என சிலர் சொன்னதற்கு மாறாக 600 கோடி வசூலை மட்டுமே கடந்ததாகத் தெரிகிறது. விமர்சன ரீதியாக பலத்த விமர்சனங்களைப் படம் பெற்றது. 'கேஜிஎப்' சாயல்தான் படத்தில் அதிகமாக இருந்ததாகப் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டதால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. ஹிந்தியில் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட முடியும், அதனால், ஹிந்தியில் வெளியாகவில்லை.
ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.