புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை வந்தாலே நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு கூடும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அந்தவகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று(ஜன., 15) ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தார். அதோடு, வாழ்க்கையில் ஒழுக்கம் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர் ரஜினி ரசிகர்களின் தொல்லை பற்றி பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ‛‛தலைவா தலைவா என ரசிகர்கள் கோஷம் போடுவார்கள். எங்களை மாதிரி இந்த தெருவில் உள்ள 21 வீட்டுக்காரங்க கஷ்டப்படுகிறார்கள். ஏன் உங்க(ரஜினி) வீட்டு கேட்டை திறந்து உள்ளே விட வேண்டியது தானே. தலைவரை பார்க்க வேண்டியது தானே. நீங்க கேட்டை மூடியே வைக்கிறீங்க. இவங்க எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி வந்து தான் இப்படி கத்தி கூச்சலிடுகிறார்கள். நாங்களும் வரி கட்டுறோம் ஆனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. போதாகுறைக்கு காலையில இப்படி பண்டிகை தினமும் அதுமா இப்படி தொந்தரவு செய்றாங்க. சாமி கூட கும்பிட முடியவில்லை'' என்றார்.