மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்திய கதைக்களத்தை நெல்சன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ரஜினிகாந்தை பொருத்தவரை பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த போதும், அப்படங்களின் இரண்டாம் பாக கதைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் நடிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அவர் ஒத்துக் கொள்வாரா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.