இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்திய கதைக்களத்தை நெல்சன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ரஜினிகாந்தை பொருத்தவரை பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த போதும், அப்படங்களின் இரண்டாம் பாக கதைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் நடிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அவர் ஒத்துக் கொள்வாரா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.