மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்திய கதைக்களத்தை நெல்சன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ரஜினிகாந்தை பொருத்தவரை பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த போதும், அப்படங்களின் இரண்டாம் பாக கதைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் நடிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அவர் ஒத்துக் கொள்வாரா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.