லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்திய கதைக்களத்தை நெல்சன் உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ரஜினிகாந்தை பொருத்தவரை பாட்ஷா, சந்திரமுகி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்த போதும், அப்படங்களின் இரண்டாம் பாக கதைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் நடிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அவர் ஒத்துக் கொள்வாரா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.