இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் துவங்கியது. இதில் திரளான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமீர், வெற்றிமாறன், ரோஜா, சிவராஜ்குமார், கருணாஸ், லைகா சுபாஸ்கரன், பார்த்திபன், வடிவேலு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. வேல் முருகன், சின்ன பொண்ணு, எஸ்ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். நடிகை லட்சுமி மேனன், தமிழ் பற்றிய பாடலுக்கு நடனம் ஆடினார். டிரம்ஸ் சிவமணி மற்றும் லிடியனின் இசை நிகழ்ச்சி நடந்தது.