என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் துவங்கியது. இதில் திரளான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமீர், வெற்றிமாறன், ரோஜா, சிவராஜ்குமார், கருணாஸ், லைகா சுபாஸ்கரன், பார்த்திபன், வடிவேலு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. வேல் முருகன், சின்ன பொண்ணு, எஸ்ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். நடிகை லட்சுமி மேனன், தமிழ் பற்றிய பாடலுக்கு நடனம் ஆடினார். டிரம்ஸ் சிவமணி மற்றும் லிடியனின் இசை நிகழ்ச்சி நடந்தது.