‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் வாழை. இந்த படம் சிறுவர்களை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த மாரி செல்வராஜ் தற்போது தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
வாழை படத்தை தனது சிறு வயதில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ் . அதாவது, வாழைத்தார் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் நிறைய பேர் இறந்து போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. அந்த லாரியில் சிறுவயதில் மாரி செல்வராஜூம் பயணித்து உயிர் தப்பி இருக்கிறார். அந்த விபத்தில் அவரது சில உறவினர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் வாழை படத்தை இருக்கியிருக்கிறாராம்.