காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
விக்ரம், பசுபதி மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரஞ்சித். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளார் ரஞ்சித். அந்த சந்திப்பின்போது அம்பேத்கர் தன்னுடைய மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் கொண்ட புத்தகத்தை அவர் பரிசாக வழங்கி உள்ளார். அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித். அதோடு, எண்ணமெல்லாம் வண்ணமம்மா என்ற ஒரு கேப்சனையும் கொடுத்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக தெரிந்தாலும் ரஞ்சித் அடுத்து இயக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க போகிறார். அதற்கான சந்திப்பே இது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.