நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் கம்மட்டிப்பாடம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் ராஜீவ் ரவி இயக்கிய இந்த படம் நிறைய விருதுகளையும் பெற்றது. குறிப்பாக ஜெயிலர் பட வில்லனான விநாயகனின் நடிப்புத்திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அதேசமயம் அந்த படத்திலேயே ஜேடி காசா என்கிற ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு அடையாளம் பெற்றவர் அஷ்ரப் மல்லிசேரி. அந்த படத்தில் கிடைத்த அறிமுகத்துடன் அப்படியே சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். சில வருட போராட்டத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம் படங்களில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களை நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுளக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸின் தந்தையாக நடித்திருந்தவர் இவர் தான். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் எழில் தற்போது தான் இயக்கி வரும் படத்தில் இவரை வில்லனுக்கு முற்றிலும் நேர்மாறான காமெடி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல அருண் மாதேஸ்வரன் டைரக்ஷனில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஷ்ரப் மல்லி சேரி மலையாளத்தை விட தமிழில் நல்ல கதாபாத்திரங்களும் நல்ல சம்பளமும் கிடைக்கிறது என்கிறார்.