தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறன்று நடந்தது. யு டியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் அதில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்து ஸ்டுடியோவை விட்டு அவர் வெளியில் வந்த போது, அவருடைய ரசிகர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரன்னர் அப் வின்னரின் கார், இதர போட்டியாளர்களின் கார்கள், அரசு பஸ்களை கடுமையாக சேதப்படுத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர் என்பவரையும், தெலங்கானா, சித்திபேட் மாவட்டம் கொல்கூர் என்ற அவர்களது சொந்த ஊரில் ஐதராபாத், ஜுபிளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இறுதிப் போட்டி முடிந்து வெளியில் வந்த போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி பல்லவியும், அவரது ரசிகர்களும் வெற்றி ஊர்வலம் நடத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு டிவி நிகழ்ச்சியின் வின்னர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.