பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் |
தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறன்று நடந்தது. யு டியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் அதில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்து ஸ்டுடியோவை விட்டு அவர் வெளியில் வந்த போது, அவருடைய ரசிகர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரன்னர் அப் வின்னரின் கார், இதர போட்டியாளர்களின் கார்கள், அரசு பஸ்களை கடுமையாக சேதப்படுத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர் என்பவரையும், தெலங்கானா, சித்திபேட் மாவட்டம் கொல்கூர் என்ற அவர்களது சொந்த ஊரில் ஐதராபாத், ஜுபிளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இறுதிப் போட்டி முடிந்து வெளியில் வந்த போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி பல்லவியும், அவரது ரசிகர்களும் வெற்றி ஊர்வலம் நடத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு டிவி நிகழ்ச்சியின் வின்னர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.