‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறன்று நடந்தது. யு டியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் அதில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்து ஸ்டுடியோவை விட்டு அவர் வெளியில் வந்த போது, அவருடைய ரசிகர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரன்னர் அப் வின்னரின் கார், இதர போட்டியாளர்களின் கார்கள், அரசு பஸ்களை கடுமையாக சேதப்படுத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர் என்பவரையும், தெலங்கானா, சித்திபேட் மாவட்டம் கொல்கூர் என்ற அவர்களது சொந்த ஊரில் ஐதராபாத், ஜுபிளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இறுதிப் போட்டி முடிந்து வெளியில் வந்த போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி பல்லவியும், அவரது ரசிகர்களும் வெற்றி ஊர்வலம் நடத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு டிவி நிகழ்ச்சியின் வின்னர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.