‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் அவரது காதலருடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'சலார்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு காலத்தில் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் பற்றி ஓபன் ஆகப் பேசியுள்ளார். “நான் கடந்த எட்டு ஆண்டுகளாக தெளிவாக இருக்கிறேன். நீங்கள் குடிக்காத போது பார்ட்டிகளில் மற்றவர்களைப் பொறுத்துக் கொள்வது கடினம். எனக்கு நிதானமாக இருப்பதுதான் சிறந்தது. இது ஒரு கட்டமாக இருக்கலாம், அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.
நான் போதைப் பொருட்களுக்கு ஒரு போதும் அடிமையானதில்லை. ஆனால், மது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது. அது எனக்கு எந்த விதத்திலும் பாசிட்டிவ்வாக அமைந்ததில்லை. நான் எப்போதும் மது மயக்கத்தில் இருந்தேன், எனது நண்பர்களுடன் குடிக்க விரும்பினேன். பின்னர் அப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோ பேட்டி பல்வேறு விதமான செய்திகளாகப் பரவி, அதை வைத்து அவரை 'டிரோல்' செய்து வைத்தார்கள். அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக, “எனது தெளிவைப் பற்றிப் பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலனளிக்காது. கடவுள் கனிவானவர், வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வெளியீட்டிற்கு முன்பாகவும் உண்மையற்ற எந்த எதிர்மறை வந்தாலும் அதைமாற்ற முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.