மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் அவரது காதலருடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'சலார்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு காலத்தில் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் பற்றி ஓபன் ஆகப் பேசியுள்ளார். “நான் கடந்த எட்டு ஆண்டுகளாக தெளிவாக இருக்கிறேன். நீங்கள் குடிக்காத போது பார்ட்டிகளில் மற்றவர்களைப் பொறுத்துக் கொள்வது கடினம். எனக்கு நிதானமாக இருப்பதுதான் சிறந்தது. இது ஒரு கட்டமாக இருக்கலாம், அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.
நான் போதைப் பொருட்களுக்கு ஒரு போதும் அடிமையானதில்லை. ஆனால், மது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது. அது எனக்கு எந்த விதத்திலும் பாசிட்டிவ்வாக அமைந்ததில்லை. நான் எப்போதும் மது மயக்கத்தில் இருந்தேன், எனது நண்பர்களுடன் குடிக்க விரும்பினேன். பின்னர் அப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோ பேட்டி பல்வேறு விதமான செய்திகளாகப் பரவி, அதை வைத்து அவரை 'டிரோல்' செய்து வைத்தார்கள். அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக, “எனது தெளிவைப் பற்றிப் பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலனளிக்காது. கடவுள் கனிவானவர், வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வெளியீட்டிற்கு முன்பாகவும் உண்மையற்ற எந்த எதிர்மறை வந்தாலும் அதைமாற்ற முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.