என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களை தயாரித்த 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர்.பிரபு திலக், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி.ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி உள்ளர். படம் பற்றி அவர் கூறும்போது “இது ஹெப்பர்லிங்க் ஜார்னரில் உருவாகி உள்ள படம். இதில் 4 தனிதனி கதைகள் இருக்கிறது. அவைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிற மாதிரியான திரைக்கதை. இதில் சமுத்திரகனி, மற்றும் யோகி பாபு நடிக்கும் கதைகள் முன்னணியில் இருக்கும். படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது” என்றார்.