மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த 2015ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, தம்பி ராமைய்யா, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமின்றி அதற்கு முன்பே தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி ஆகிய இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் மோகன்ராஜ்.
தற்போது தனி ஒருவன்- 2 படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மோகன் ராஜா, இப்போது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதல் பாகத்தில் அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தை போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் வில்லன் வேடம் முக்கியத்துவம் பெருகிறதாம்.