இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என திரையுலகிலும் வெளியிலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இத்தனை வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நடித்து நீடித்து வருவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. ஆனால், தனி கதாநாயகியாக நயன்தாராவால் குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தர முடியவில்லை என்பதும் உண்மை.
“நீ எங்கே என் அன்பே, மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், ஓ 2, கனெக்ட், அன்னபூரணி” ஆகிய படங்களில் தனி கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. இதில் 'கோலமாவு கோகிலா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை.
சரியான கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் அவரால் தனித்து வெற்றி பெற முடியவில்லை. 'பிகில்' படத்திற்குப் பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடித்த 'தர்பார், அண்ணாத்த' மற்றும் இந்த வருடம் வெளிவந்த 'இறைவன்' ஆகிய படங்கள் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தது. இடையில் 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சுமாராக ஓடியது. அதே சமயம் அவர் ஹிந்தியில் அறிமுகமான 'ஜவான்' படம் ஆயிரம் கோடி வசூல் படமாக அமைந்தது.
கதையிலும், கதாபாத்திரங்களிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த தொடர் தோல்விகளிலிருந்து அவர் தப்பிக்க முடியும்.