ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகை என திரையுலகிலும் வெளியிலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இத்தனை வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நடித்து நீடித்து வருவதெல்லாம் சாதாரண விஷயமல்ல. ஆனால், தனி கதாநாயகியாக நயன்தாராவால் குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தர முடியவில்லை என்பதும் உண்மை.
“நீ எங்கே என் அன்பே, மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், ஓ 2, கனெக்ட், அன்னபூரணி” ஆகிய படங்களில் தனி கதாநாயகியாக நடித்திருக்கிறார் நயன்தாரா. இதில் 'கோலமாவு கோகிலா' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை.
சரியான கதைகளைத் தேர்வு செய்யாத காரணத்தால் அவரால் தனித்து வெற்றி பெற முடியவில்லை. 'பிகில்' படத்திற்குப் பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடித்த 'தர்பார், அண்ணாத்த' மற்றும் இந்த வருடம் வெளிவந்த 'இறைவன்' ஆகிய படங்கள் கூட தோல்விப் படங்களாகவே அமைந்தது. இடையில் 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சுமாராக ஓடியது. அதே சமயம் அவர் ஹிந்தியில் அறிமுகமான 'ஜவான்' படம் ஆயிரம் கோடி வசூல் படமாக அமைந்தது.
கதையிலும், கதாபாத்திரங்களிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த தொடர் தோல்விகளிலிருந்து அவர் தப்பிக்க முடியும்.