இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படங்களில் படையப்பா திரைப்படம் ஒரு தனித்துவமான மிகப்பெரிய வெற்றி படம். அந்த படத்தில் ஹீரோவுக்கு சமமாக ஹீரோயினுக்கும் வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது, “நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதும்போது என் மனதில் தோன்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அவரது நிஜ வாழ்க்கை குணாதிசயங்களை மையப்படுத்தி தான் நீலாம்பரியை உருவாக்கி இருந்தேன். ஜெயலலிதாவிற்கு என ஒரு ஸ்டைலிஷான பாடி லாங்குவேஜ் உண்டு. அதை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்தேன்” என்று கூறினார்.
ஆனால் இவரது இந்த பேச்சு அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கே.எஸ் ரவிக்குமாரின் இந்த பேச்சை கண்டித்து பேசி உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இது போன்று ஏன் பேசவில்லை? இப்போது மட்டும் எப்படி தைரியமாக பேசுகிறார்? கே.எஸ். ரவிக்குமார் ஒரு கோழை. இனி இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.