இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படங்களில் படையப்பா திரைப்படம் ஒரு தனித்துவமான மிகப்பெரிய வெற்றி படம். அந்த படத்தில் ஹீரோவுக்கு சமமாக ஹீரோயினுக்கும் வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது, “நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதும்போது என் மனதில் தோன்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அவரது நிஜ வாழ்க்கை குணாதிசயங்களை மையப்படுத்தி தான் நீலாம்பரியை உருவாக்கி இருந்தேன். ஜெயலலிதாவிற்கு என ஒரு ஸ்டைலிஷான பாடி லாங்குவேஜ் உண்டு. அதை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்தேன்” என்று கூறினார்.
ஆனால் இவரது இந்த பேச்சு அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கே.எஸ் ரவிக்குமாரின் இந்த பேச்சை கண்டித்து பேசி உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இது போன்று ஏன் பேசவில்லை? இப்போது மட்டும் எப்படி தைரியமாக பேசுகிறார்? கே.எஸ். ரவிக்குமார் ஒரு கோழை. இனி இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.