மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொன்ன கருத்தினால் அவருக்கு எதிராக திரையுலகை சார்ந்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனால் அதையடுத்தும் அவர் வருத்தம் தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‛‛பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் எந்த பொதுவெளியில் நின்று எகத்தாளமாக அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து தொடச்சி தூர எரியனும்.
அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்திலும் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அங்கெல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி''
என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.