துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை பார்த்த ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதோடு எனக்கும் கதை பண்ணுங்க. பியூச்சரில் நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். அப்படி ரஜினி பேசியிருந்த ஆடியோவும் அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதையடுத்து ரஜினிக்காக கதை தயார் செய்து கொண்டு அவரை அணுகினார் தேசிங்கு பெரியசாமி. அவர்கள் இணையப்போவதாக செய்திகள் வெளியானபோதும் அந்த கூட்டணி உறுதியாகவில்லை.
இந்த நிலையில் அதே கதையை சிம்புவிற்கு சொல்லி ஓகே பண்ணிவிட்டார் தேசிங்கு பெரியசாமி. சிம்புவின் 48வது படமாக உருவாகும் அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அந்த படத்திற்காக தற்போது தனது உடல் கட்டை தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி அளித்த ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ரஜினி இடத்தில் நான் கூறிய போது, எனக்கு வாழ்த்து தெரிவித்தவர், நல்லா சூப்பரா பண்ணுங்க என்று தெரிவித்தார் என கூறியிருக்கும் தேசிங்கு பெரியசாமி, சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறார். பல மாதங்களாக சில பயிற்சிகளை பெற்று தனது பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.