எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை பார்த்த ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதோடு எனக்கும் கதை பண்ணுங்க. பியூச்சரில் நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். அப்படி ரஜினி பேசியிருந்த ஆடியோவும் அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதையடுத்து ரஜினிக்காக கதை தயார் செய்து கொண்டு அவரை அணுகினார் தேசிங்கு பெரியசாமி. அவர்கள் இணையப்போவதாக செய்திகள் வெளியானபோதும் அந்த கூட்டணி உறுதியாகவில்லை.
இந்த நிலையில் அதே கதையை சிம்புவிற்கு சொல்லி ஓகே பண்ணிவிட்டார் தேசிங்கு பெரியசாமி. சிம்புவின் 48வது படமாக உருவாகும் அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அந்த படத்திற்காக தற்போது தனது உடல் கட்டை தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி அளித்த ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ரஜினி இடத்தில் நான் கூறிய போது, எனக்கு வாழ்த்து தெரிவித்தவர், நல்லா சூப்பரா பண்ணுங்க என்று தெரிவித்தார் என கூறியிருக்கும் தேசிங்கு பெரியசாமி, சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறார். பல மாதங்களாக சில பயிற்சிகளை பெற்று தனது பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.